“என்னால் ஒரு உபயோகமும் இல்லை”
“என்னை எல்லோரும் எதிர்க்கிறார்கள்”
“எனக்கு வயதாகி விட்டது”
“இனி என்ன செய்ய…”
“எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது.”
என்று சோர்ந்து போய் ஒரு மூலையில் குந்தி விடும் பெண்களை நாளாந்த வாழ்க்கையில் ஏராளம் காணலாம்.
ஓலைக்கூரை பிய்ந்து போன தன் வீட்டைப் பார்த்து’அட இனி நிலவையும் நட்சத்திரங்களையும் படுத்திருந்தே பார்க்கலாம்’என்று உற்சாகப்பட்டாராம் ஒரு கவிஞர்.
எதிர்மறை மனோபாவம் பற்றி பேசாத அறிஞர்கள் இல்லை.
‘எனக்கு ஏலாது’என்று உதட்டில் நெளியும் வார்த்தைகள் தொட்டு
முழு உலகமுமே எனக்கு எதிராக நிற்கிறது’என்று காழ்ப்புணர்ச்சி வரை இந்த எதிர்மறை மனோபாவத்தின் ஓரோர் கட்டங்கள் தான்.ஒரு செழித்து நிற்கும் ஒரு விருட்சத்தின் வேரை அரித்து மரத்தையே விழுத்தி விடக்கூடிய வல்லமை வாய்ந்தது இந்த எதிர் மனப்பாங்கு.
சரி…இந்த மனப்பாங்கை மாற்றி எப்படி வாழ்க்கையை பொஸிடிவ்வாக அல்லாது நேர் மனப்பாங்கோடு சந்தோஷமாக எதிர்கொள்வது என நீங்கள் கேட்பது புரிகிறது.இந்த விடயத்தைப்பற்றி பல்வேறுமோழிகளில் பல்வேறு நூல்களும் சஞ்சிகைகளும் பேசுகின்றன.சுருக்கமாகவும் இறுக்கமாகவும் சொல்வதானால் நேர் மனோபாவத்தை வளர்த்துக்கொள்வது எமது கைகளில் தான் இருக்கிறது.
1.எப்போதுமே உங்கள் கவனம் உங்கள் இறுதி அடைவை நோக்கியதாக இருக்கட்டும்.இரத்தினக்கல் அகழும் போது கையில் பிசுபிசுக்கும் சேற்றைப் பற்றிக் கவலைப்பட யாருக்கு நேரம் இருக்கிறது.
2.எதையும் இப்போதே செய்யும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ளுங்கள்.ஒரு வேலையை முடிக்கும் போது வரும் மனநிறைவும் நேர்மனப்பாங்கை அதிகரிக்கும்.
3.எதிலும் குறை காணும் மனநிலையை விடுத்து வாழ்வில் உங்களுக்குக் கிடைத்திருக்கும் ஏராளமான நன்மைகளுக்கு நன்றியுடையவர்களாக இருங்கள்.
4.அறிவைத் தேடுங்கள்…ஒரு புதிய வகுப்பில் சேருங்கள்.உங்கள் வயதைப் பற்றிக் கவலைப்படாதீர்கள்.உற்சாகமும் தன்னம்ப்பிக்கையும் ஏற்படும்.
5.உங்களைப்பற்றி நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள்.உங்கள் ஆளுமை பற்றிய நேர் மனப்பாங்கை வளர்த்துக் கொள்ளுங்கள்.
6.எதிர்மனப்பாங்கோடு கதைக்கும் நபர்கள்,எதிர் மனப்பாங்கை ஏற்படுத்தும் விடயங்கள் இவற்றிலிருந்து தவிர்ந்து கொள்ளுங்கள்.
7.உங்களால் செய்யப்பட வேண்டிய வேலைகள்,விடயங்களை விரும்பிச் செய்வதற்க்குக் கற்றுக் கொள்ளுங்கள்.
8.உங்களுடைய நாளை ஆரோக்கியமான பொஸிடிவ்வான ஒரு செயல் அல்லது சிந்தனை கொண்டு ஆரம்பியுங்கள்.
வெற்றிக்கு வாழ்த்துக்கள்!!
Showing posts with label சுயவிருத்தி. Show all posts
Showing posts with label சுயவிருத்தி. Show all posts
இனி என்ன செய்ய?
Labels: எங்கள் தேசம் , சுயவிருத்தி , வாழ்க்கைப்பாடம்
